செய்திகள்
மெதுவாக பந்து வீச்சு - கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
அந்த அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்கவில்லை. இதனால் மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணி மீது ஐ.பி.எல். விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன் கேப்டன் ரோகித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மார்கன் ஆகியோர் மீது இதே நடவடிக்கைக்காக தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.