செய்திகள்
சர்பராஸ் அகமது

தகாத வார்த்தை பயன்படுத்திய சர்பராஸ் அகமதுக்கு அபராதம்

Published On 2020-11-08 11:57 GMT   |   Update On 2020-11-08 11:57 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது போட்டியின்போது தகாத வார்த்தையை பயன்படுத்தியதால் அபராதத்திற்கு உள்ளானார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது. இவர் பாகிஸ்தான் உள்ளூர் தொடரான குயைத்-இ-ஆசாம் டிராபி போட்டியில் சிந்து பர்ஸ்ட் லெவன் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

போட்டியின்போது நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து தகாத வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஆன்-பீல்டு அம்பயர்கள் புகார் ஆளிக்க, போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்டிரல் பஞ்சாப் பேட்ஸ்மேன் உஸ்மான் சலாவதீனுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News