செய்திகள்
பெங்களூர் மோசமான பேட்டிங் - ஐதராபாத் வெற்றிபெற 121 ரன்கள் இலக்கு
ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப், தேவ் படிக்கல் களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்திருந்த படிக்கல் சந்தீப் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த கேப்டன் கோலி 7 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸ் 24 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பிலிப் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார்.
ஆனால், பின்னர் வந்த வீரர்கள் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர்அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.