செய்திகள்
99 ரன்னில் அவுட்டாகி சோகமாக வெளியேறும் கெய்ல்

கெய்ல் 99 ரன்னில் ஏமாற்றம்: ராஜஸ்தானுக்கு 186 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2020-10-30 15:58 GMT   |   Update On 2020-10-30 15:58 GMT
கிறிஸ் கெய்ல் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை கோட்டை விட, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்க 186 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்.
ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பஞ்சாப் அணியின் மந்தீப் சிங், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஜாஃப்ரா ஆர்சர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை சந்தித்த மந்தீப் சிங் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

அடுத்து கேஎல் ராகுல் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ் கெய்ல் 33 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 14.4 ஓவரில் 121 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. கேஎல் ராகுல் 41 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 10 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். என்றாலும் கிறிஸ் கெய்ல் சதத்தை நோக்கி முன்னேறினார்.

கடைசி ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 99 ரன்னை எட்டினார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து செஞ்சூரி அடிப்பார் என்று நினைக்கையில் அந்த பந்தில் க்ளீன் போல்டானார்.

அவர் 46 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 99 ரன்கள் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News