செய்திகள்
ஜடேஜா

ஐபிஎல் வரலாற்றில் முதல் அரைசதத்தை பதிவு செய்த ஜடேஜா

Published On 2020-10-02 18:08 GMT   |   Update On 2020-10-02 18:08 GMT
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 35 பந்தில் 50 ரன்கள் அடித்த ஜடேஜா, முதன்முறையாக அரைசதத்தை பதிவு செய்ததுடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 8.2 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்ததால் ரவீந்திர ஜடேஜா முன்னதாகவே களம் இறங்கிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ரன்கள் அடித்தார்.

அவர் 34 பந்தில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், முதல் அரைசதம் ஆகும்.

இதற்கு முன் 2012-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 48 ரன்களும், 2011-ல் கேரளா அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 47 ரன்களும், 2012-ல் சென்னை அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 44 ரன்களும் அடித்துள்ளார்.
Tags:    

Similar News