செய்திகள்
கிறிஸ் கெய்ல்

அனில் கும்ப்ளே தலைமை ஆசிரியர், கேஎல் ராகுல் புதிய கேப்டன்: கிறிஸ் கெய்ல்

Published On 2020-09-07 10:01 GMT   |   Update On 2020-09-07 10:01 GMT
கேஎல் ராகுல் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட இருப்பதை எதிர்பார்த்து இருக்கிறேன் என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக உள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘திரும்பவும் வகுப்பறைக்கு வந்துள்ளோம். சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் இருப்பது சிறப்பான விசயம். அதுபோல் சில புதிய ஆசிரியர்கள் வந்துள்ளனர். நாங்கள் புதிய தலைமை ஆசிரியரை (அனில் கும்ப்ளே) பெற்றுள்ளோம். புதிய கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கிறார். இருவருடன் சேர்ந்து பணியாற்ற காத்துக் கொண்டிருக்கிறேன்.

தனிமைப்படுத்துதல் முறை வழக்கமானதுதான். எனக்கு அதிக சிறந்த அளவில் ரிலாக்ஸ் கொடுத்தது. சில உடற்பயிற்சிகளை செய்தேன். டிவி பார்த்தேன். தற்போது அணியுடன் பயிற்சிக்கு தயாராகியுள்ளேன்’’என்றார்.
Tags:    

Similar News