செய்திகள்
துபாய் புறப்பட்ட சென்னை அணி வீரர்கள்

ஐபிஎல் போட்டிக்காக துபாய் புறப்பட்டனர் சென்னை அணி வீரர்கள்

Published On 2020-08-21 09:13 GMT   |   Update On 2020-08-21 09:13 GMT
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று துபாய்க்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மதியம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து மதியம் டோனி உள்ளிட்ட வீரர்கள் விமான நிலையம் புறப்பட்டனர். அங்கிருந்து விமானம் மூலம் துபாய் சென்றனர்.


Tags:    

Similar News