செய்திகள்

புரோ கபடி லீக் - ஜெய்ப்பூரை வீழ்த்தி ஏழாவது வெற்றியை பதிவுசெய்தது மும்பை

Published On 2018-11-09 17:12 GMT   |   Update On 2018-11-09 17:12 GMT
புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய மும்பை அணி தனது ஏழாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
மும்பை:

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி மளமளவென புள்ளிகளை குவிக்க தொடங்கியது. இதனால் முதல் பாதியில் 26- 8 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.



ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை அணி சிறப்பாக விளையாடியது. இறுதியில், ஜெய்ப்பூர் அணியை 48 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த ஏழாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
Tags:    

Similar News