செய்திகள்

ஜூனியர் ஆக்கி - இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி

Published On 2018-10-13 22:10 GMT   |   Update On 2018-10-13 22:10 GMT
ஜூனியர் ஆக்கி இறுதிஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது. #JoharCup #JuniorHockeyFinal
ஜோஹர் பாரு:

8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த மோதலில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.

இந்திய அணியில் குர்சாஹிப்ஜித் சிங் 4-வது நிமிடத்திலும், அபிஷேக் 55-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் டேனியல் வெய்ட் 7-வது நிமிடத்திலும், ஜேம்ஸ் ஓட்ஸ் 39-வது மற்றும் 42-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். முன்னதாக லீக் சுற்றிலும் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. #SultanJoharCup #JuniorHockeyFinal 
Tags:    

Similar News