செய்திகள்

பவுலரை மாற்றி விடுவேன்- குல்தீப்க்கு எச்சரிக்கை விடுத்த டோனி

Published On 2018-09-26 13:06 IST   |   Update On 2018-09-26 14:06:00 IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டர்களை மாற்ற சொன்ன குல்தீப் யாதவுக்கு டோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். #MSDhoni #KuldeepYadav #INDvAFG
குல்தீப் யாதவின் பந்துவீச்சு நேற்று சிறப்பாக இருந்தது. அவரது பந்து வீச்சுக்கு ஏற்றார் போல் டோனி பீல்டர்களையும் நிற்க வைத்தார்.

ஆனாலும் குல்தீப் மீண்டும் மீண்டும் பீல்டர்களை மாற்ற சொல்லிக் கொண்டே இருந்தார். இதனால் டோனி சற்று கடுப்பாகி அவரை எச்சரித்தார்.



“பவுலிங் போடப்பா. இல்லையென்றால் பவுலரை மாற்றி விடுவேன்” என்றார். டோனி இந்தியில் கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு இதே மாதிரி ஒருமுறை குல்தீப் யாதவை டோனி எச்சரித்து இருந்தார். #MSDhoni #KuldeepYadav #INDvAFG
Tags:    

Similar News