செய்திகள்

விராட் கோலி, மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

Published On 2018-09-20 10:34 GMT   |   Update On 2018-09-20 10:34 GMT
விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #ViratKohli #MirabaiChanu #RajivGandhiKhelRatna
புதுடெல்லி:

மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு இந்த துறையின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும்.

இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து அந்த அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் விராட் கோலி, மீராபாய் சானு உள்பட பல வீரர்களின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.



இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும்.

இந்த விருதுகள் செப்டம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #ViratKohli #MirabaiChanu #RajivGandhiKhelRatna
Tags:    

Similar News