செய்திகள்
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்- இந்தியாவை வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன்- செவ்வாய்க்கிழமை பொதுவிடுமுறை
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன் பட்டம் வென்றது. இதை கொண்டாட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது #INDvMDV #SAFF
7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்றது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது. ஒரு அரையிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி மாலத்தீவும், மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
நேற்றிரவு இந்தியா - மாலத்தீவு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் மாலத்தீவு வீரர் மஹுதீ முதல் கோலை அடித்தார். அதன்பின் இரு அணிகளும் முதல் பாதி நேரம் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் 45 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 0-1 என பின் தங்கியிருந்தது.
2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய வீரர்களால் கோல் அடிக்கவில்லை. மாறாக 66-வது நிமிடத்தில் மாலத்தீவு அணியின் ஃபசிர் கோல் அடித்தார். இதனால் மாலத்தீவு 2-0 என முன்னிலை வகித்தது. இந்திய வீரர்கள் எவ்வளவு போராடியும் 90 நிமிடத்திற்குள் கோல் அடிக்க இயலவில்லை.
இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் பாஸ்சி ஒரு கோல் அடித்தார். அதன்பின் கோல் அடிக்க முடியாததால் மாலத்தீவு 2-1 என வெற்றி பெற்று முதன்முறையாக தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.
இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை (18.09.2018) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இந்தியா - மாலத்தீவு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் மாலத்தீவு வீரர் மஹுதீ முதல் கோலை அடித்தார். அதன்பின் இரு அணிகளும் முதல் பாதி நேரம் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் 45 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 0-1 என பின் தங்கியிருந்தது.
2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய வீரர்களால் கோல் அடிக்கவில்லை. மாறாக 66-வது நிமிடத்தில் மாலத்தீவு அணியின் ஃபசிர் கோல் அடித்தார். இதனால் மாலத்தீவு 2-0 என முன்னிலை வகித்தது. இந்திய வீரர்கள் எவ்வளவு போராடியும் 90 நிமிடத்திற்குள் கோல் அடிக்க இயலவில்லை.
இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் பாஸ்சி ஒரு கோல் அடித்தார். அதன்பின் கோல் அடிக்க முடியாததால் மாலத்தீவு 2-1 என வெற்றி பெற்று முதன்முறையாக தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.
இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை (18.09.2018) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.