செய்திகள்

U19 ஒருநாள் கிரிக்கெட்- 2வது ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

Published On 2018-08-02 16:21 GMT   |   Update On 2018-08-02 16:21 GMT
இலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை. #IND19vSL19
இந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்றது.

இதற்கிடையே, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் தொடங்கியது. கொழும்பில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தி பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரரான பவன் ஷா அதிகபட்சமாக 49 ரன்களும், ஆயுஷ் படோனி 36 ரன்களும், சமிர் சவுத்ரி 32 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில்,  இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி சார்பில் துல்ஷன் 3 விக்கெட்டும், பெர்னாண்டோ, மனசிங்கே, பரனவிதனா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் நிபுன் தனஞ்செயா 92 ரன்களும், சூரிய பந்தாரா 52 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை அணி 45.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், தொடரையும் சமன் செய்துள்ளது. #IND19vSL19
Tags:    

Similar News