செய்திகள்

மேத்யூஸ், டிக்வெல்லா ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்காவிற்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை

Published On 2018-08-01 13:08 GMT   |   Update On 2018-08-01 13:08 GMT
தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #ENGvIND
இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணியின் உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 9 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், குசால் பெரேரா 12 ரன்னிலும் வெளியேறினார்கள்.

அதன்பின் டிக்வெல்லா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதம் அடித்த டிக்வெல்லா 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



அதன்பின் மீண்டும் இலங்கை விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ஷெஹன் ஜெயசூர்யா 18 ரன்னிலும், திசாரா பேரேரா 19 ரன்னிலும், அகிலா தனஞ்ஜெயா 9 ரன்னிலும், சுரங்கா லக்மல் 7 ரன்னிலும் வெளியேறினார்கள்.



கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி 79 ரன்கள் சேர்க்க இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலுக்வாயோ தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News