செய்திகள்

ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் குசால் பெரேரா

Published On 2018-06-26 11:11 GMT   |   Update On 2018-06-26 11:11 GMT
பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குசால் பேரேரா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். #WIvSL
வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. அப்போது இலங்கை வீரர் குசால் பெரேரா லாங்-ஆன் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் பறந்த சென்றது. இதை பிடிக்க முயன்ற குசால் பெரேரா பவுண்டரி லைனில் இருந்த விளம்பர பேனரில் விழுந்தார். இதனால் பலமாக அடிபட்டது. உடனே, ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



இலங்கையின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவையுள்ள நிலையில் 5 விக்கெட் மட்டுமே கைவசம் உள்ளது. இதனால் குசால் பெரேரா களம் இறங்குவரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு பயப்பட வேண்டிய நிலையில் காயம் ஏற்படவில்லை. உடனடியாக மைதானத்திற்கு திரும்பலாம். ஆனால், சற்று ஓய்வு என்ற அறிவிறுத்தப்பட்டுள்ளது. இன்று இலங்கை அணிக்காக கட்டாயம் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், பெரேரா களம் இறங்குவார்.
Tags:    

Similar News