செய்திகள்
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒலிபரப்பு உரிமையை பெற்றது பிபிசி
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை ஒலிபரப்பும் உரிமையை பெற்றது பிசிசி நிறுவனம். #ICCWorldCup
பிபிசி நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளை ரேடியோவில் நேரடி ஒலிபரப்பு செய்து வருகிறது இதற்கு இங்கிலாந்தில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக பிசிசி நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது.
அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரையும் நேரடி ஒலிபரப்பு செய்ய விரும்பியது.
தற்போது ஐசிசியுடன் இதற்கான ஒலிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. பிசிசி ரேடியோ 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா, ரேடியோ 4 லாங் வேப், பிசிசி ஸ்போர்ட் வெப்சைட் ஆகியவற்றில் ஒலிபரப்பு செய்ய இருக்கிறது. இந்த தொடரோடு 2023 வரை நடைபெறும் ஐசிசி-யின் முக்கியமான தொடர்களையும் ஒலிபரப்பு செய்ய இருக்கிறது.
அடுத்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரையும் நேரடி ஒலிபரப்பு செய்ய விரும்பியது.
தற்போது ஐசிசியுடன் இதற்கான ஒலிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. பிசிசி ரேடியோ 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா, ரேடியோ 4 லாங் வேப், பிசிசி ஸ்போர்ட் வெப்சைட் ஆகியவற்றில் ஒலிபரப்பு செய்ய இருக்கிறது. இந்த தொடரோடு 2023 வரை நடைபெறும் ஐசிசி-யின் முக்கியமான தொடர்களையும் ஒலிபரப்பு செய்ய இருக்கிறது.