செய்திகள்
எம்எஸ் டோனிக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். #IPL2018 #RRvCSK
ஐபிஎல் தொடரின் 43-வது ஆட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராஜஸ்தான் அரசுடன் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இந்த போட்டியை காண மைதானம் வந்திருந்தார். இவர் போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் டோனிக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
இந்த போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராஜஸ்தான் அரசுடன் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இந்த போட்டியை காண மைதானம் வந்திருந்தார். இவர் போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் டோனிக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.