செய்திகள்

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்ப்பு: தரம்சாலாவில் கோலி விளையாடுவாரா?

Published On 2017-03-23 15:16 GMT   |   Update On 2017-03-23 15:16 GMT
இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். இதனால் தரம்சாலா டெஸ்டில் விராட் கோலி விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.

போட்டியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் கடைசி போட்டி தரம்சாலாவில் 25-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்று தெரிகிறது.



இதை உறுதிப்படுத்தும் வகையில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற பயிற்சியில் விராட் கோலி ஈடுபடவில்லை. உடற்தகுதி இருந்தால் மட்டுமே அணியில் விளையாட முடியும். இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தரம்சாலாவிற்கு நாளை விரைகிறார்.

இதனால் விராட் கோலி தரம்சாலா போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிய வருகிறது.

Similar News