ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா முத்திரை பதிக்குமா?
இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இரட்டை இலக்கத்தை தொட்டது கிடையாது. அதிக பட்சமாக லண்டனில் (2012) நடந்த ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கம் பெற்று இருந்தது.
ரியோ ஒலிம்பிக் 10-க்கும் அதிகமான பதக்கத்தை கைப்பற்ற இரட்டை இலக்கத்தை தொடும் ஆர்வத்தில் உள்ளது. அதற்காக இந்திய வீரர், வீராங்கனைகள் கடுமையாக போராடுவார்கள்.
இந்திய அணி வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, ஆக்கி, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென் னிஸ் மல்யுத்தம், பளு தூக்கு தல் ஆகிய 15 விளையாட்டில் கலந்து கொள்வது 118 வீரர், வீராங்கனைகள் பங்கேற் கிறார்கள். இதில் 56 பேர் வீராங்கனைகள் ஆவார்கள்.
துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், டென்னிஸ், குத்துச்சண்டை, வில்வித்தை, பேட்மின்டன், ஆகிய போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்கி சுடுதலில் ஜிதுராய் (10 மீட்டர் ஏர்பிஸ்டல்) 50 மீட்டர் பிஸ்டல்), அபினவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர்ரைபிள்) மற்றும் ஹீயா சிந்து (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), 25 மீட்டர் பிஸ்டல் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.
பேட்மின்டன் போட்டியில் சாய்னா நேவால் மிகுந்த நம்பிக்கையில் உள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற அவர் ரியோ ஒலிம்பிக்கிலும் பதக்கம் கைப்பற்றி முத்திரை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடுகிறார். இந்த பிரிவில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருக்கிறது. இதே போல வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியும் பதக்க வாய்ப்பில் உள்ளார். சமீபத்தில் அவர் உலக சாதனையை சமன் செய்து இருந்தார். இதனால் அவரும் முத்திரை பதிக்கலாம்.
65 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த வீரர் யோகேஸ் வர்த்தும் பதக்க வாய்ப்பில் உள்ளார். லண்டன் ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வென்ற ஓவா இந்த முறை வெள்ளிப் பதக்கம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.
இதேபோல் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் ஹிவதாபா (பாந்தம் வெயிட்), விகாஸ் கிருஷ்ணன் யாதவ் (மிடில் வெயிட்) ஆகியோரும் பதக்க வாய்ப்பில் உள்ளவர்கள் ஆவார்கள்.
இந்திய ஆக்கி அணி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மிகப் பெரிய அணிகளை வீழ்த்தி இருந்தது. இதனால் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கியில் பதக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக் ஆக்கி அணி பதக்கம் வென்று இருந்தது.
ரியோ ஒலிம்பிக்கில் திறமையான இந்தியர்கள் பங்கேற்பதால் இந்த முறை இரட்டை இலக்க பதக்கம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.