புதுச்சேரி

புதுச்சேரி அரசை பார்த்து தி.மு.க. அரசு கற்றுக் கொள்ள வேண்டும் - விஜய்

Published On 2025-12-09 11:38 IST   |   Update On 2025-12-09 11:38:00 IST
  • புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன், இது என் கடமை.
  • தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள்.

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-

* புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க?

* மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி. ஆனால் நமக்கு அந்த வேறுபாடு கிடையாது. நாம் ஒன்று தான்.

* தமிழ்நாடு, புதுச்சேரி வேறுவேறு என பிரித்தாலும் நாமெல்லம் வேறு வேறு கிடையாது.. நாமெல்லாம் ஒன்று தான், சொந்தம் தான்.

* உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் நம் உயிர் தான். பாச உணர்வு இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை.

* மகாகவி பாரதியார் இருந்த மண், பாரதிதாசன் பிறந்தமண் போன்ற சிறப்புகளை பெற்றது புதுச்சேரி.

* நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர். அவரை மிஸ் செய்து விடாதீர்கள் என நம்மை அலர்ட் செய்தது புதுச்சேரிதான்.

* தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே புதுச்சேரியில் ஆட்சி அமைத்தார் எம்.ஜி.ஆர்.

* இந்த விஜய் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என்று நினைக்காதீர்கள். புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன், இது என் கடமை.

* தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள்.

* புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மனப்பூர்வ நன்றி. வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சிக்கு பாரபட்சம் காட்டவில்லை. இதை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 

Tags:    

Similar News