இந்தியா
சத்திய சோதனை புத்தகம் போல, பொய்களின் சோதனை என மோடி புத்தகம் எழுதலாம் - ராகுல் காந்தி
- அரசியலமைப்பு புத்தகத்தில் காந்தி, அம்பேத்கர், நேருவின் கொள்கைகள் உள்ளது.
- அரசியலமைப்பு புத்தகத்தில் சாவர்க்கரின் சித்தாந்தம் கிடையாது.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்/
மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, "நீங்கள் அரசியலமைப்பு புத்தகத்தின் நகலை கையில் வைத்திருக்கும்போது, அதில் மகாத்மா காந்தி, பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள். அதில் சாவர்க்கரின் சித்தாந்தம் கிடையாது.
மகாத்மா காந்தி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சத்திய சோதனை என புத்தகம் எழுதியதுபோல, பிரதமர் மோடி தன்னுடைய சுயசரிதையை பொய்களின் மீதான சோதனை என புத்தகம் எழுதலாம்" என்று கிண்டலாக தெரிவித்தார்.