இந்தியா

மத்திய அரசுக்கு எதிரான எக்ஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி

Published On 2025-09-24 18:45 IST   |   Update On 2025-09-24 18:52:00 IST
  • அமெரிக்க சட்டங்களை தவறாமல் பின்பற்றும் எக்ஸ் நிறுவனம், இந்தியச் சட்டங்களை பின்பற்ற மறுக்கிறது.
  • சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது காலத்தின் கட்டாயம்- கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து.

எக்ஸ் பக்கத்தில் உள்ள பல கணக்குகளை முடக்கவும், பதிவுகளை நீக்கவும் மத்திய அரசு, எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் எக்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அமெரிக்க சட்டங்களை தவறாமல் பின்பற்றும் எக்ஸ் நிறுவனம், இந்தியச் சட்டங்களை பின்பற்ற மறுப்பதாகவும், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்றும் கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், எக்ஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

Tags:    

Similar News