இந்தியா

திருமணமான ஆறே மாதத்தில் சோகம்: இம்முறை ராக்கி கட்டமுடியாது என அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதிய தங்கை

Published On 2025-08-05 08:23 IST   |   Update On 2025-08-05 08:23:00 IST
  • திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே ஸ்ரீவித்யாவை ராம்பாபு கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளார்.
  • ஸ்ரீவித்யாவின் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக வரதட்சணை மற்றும் பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதில் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பிட்டு சொல்லப்போனால் திருமணம் ஆகி 78 நாட்களே ஆன ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஆந்திராவில் திருமணம் ஆன 6 மாதங்களில் 24-வது பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதான ஸ்ரீவித்யா. இவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கிராம சர்வேயரான ராம் பாபுவுக்கும் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே ஸ்ரீவித்யாவை ராம்பாபு கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளார்.

தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ராம்பாபு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளார். மேலும் வேறொரு பெண்ணின் முன்பு இவள் எதற்கும் லாயக்கில்லை என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீவித்யா கடிதம் ஒன்றை எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கடிதத்தில், "என்னால் உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது மரணத்திற்கு என் கணவரும் அவன் வீட்டாரும்தான் காரணம். அண்ணா... என்னால் இந்தமுறை உனக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாட முடியாது" என எழுதி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீவித்யாவின் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News