இந்தியா

திருப்பதியில் 12-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

Published On 2023-09-09 11:10 IST   |   Update On 2023-09-09 11:10:00 IST
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
  • 11-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது.

திருப்பதி:

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

இதனையொட்டி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தம் செய்யும் நிகழ்ச்சி 12-ந் தேதி நடக்கிறது. எனவே 12-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக 11-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News