இந்தியா

முதல்-மந்திரி நாற்காலிக்காக இந்துத்வாவை கைவிட்டவர் உத்தவ் தாக்கரே: நாராயண் ரானே

Published On 2022-10-08 08:36 IST   |   Update On 2022-10-08 08:36:00 IST
  • இந்துத்வா பற்றி பேச உத்தவ் தாக்கரேவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
  • உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவம் போலியானது.

மும்பை :

மத்திய மந்திரி நாராயண் ரானே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டதால் 56 இடங்களை கைப்பற்ற முடிந்தது. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா கட்சியை கைவிட்டது.

சிவசேனா கட்சி ஏன் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து? அவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் முதல்-மந்திரி பதவிக்காக இந்துத்வா கொள்கையை கைவிட்டுள்ளனர்.

முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்துத்வா பற்றி பேசக்கூடாது. இந்துத்வா பற்றி பேச அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவரது இந்துத்துவம் போலியானது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சிவாஜி பார்க்கில் நடத்திய தசரா பொதுக்கூட்டத்தில் அவர் தன்னை பற்றி தற்பெருமை கூறிகொள்வதாகவும், தனது எதிரிகளை கேவலப்படுத்துவதாகவும் தான் இருந்ததே தவிர வேறு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News