இந்தியா
ஏ.ஐ. பயன்படுத்தி SIR: இது மிகப்பெரிய மோசடி- மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு
- மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
- SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-
* ஏ.ஐ. பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி.
* மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
* தேர்தல் வரும் நிலையில் சோனார் பங்க்ளா (Sonar Bangla) வாக்குறுதியை கொடுத்தார்கள். ஆனால், பெங்காலி பேசும் மக்கள் மற்ற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள்.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
* SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.