இந்தியா

ஏ.ஐ. பயன்படுத்தி SIR: இது மிகப்பெரிய மோசடி- மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2025-12-30 14:47 IST   |   Update On 2025-12-30 14:47:00 IST
  • மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
  • SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-

* ஏ.ஐ. பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி.

* மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.

* தேர்தல் வரும் நிலையில் சோனார் பங்க்ளா (Sonar Bangla) வாக்குறுதியை கொடுத்தார்கள். ஆனால், பெங்காலி பேசும் மக்கள் மற்ற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள்.

* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

* SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

Tags:    

Similar News