இந்தியா

ஆபரேஷன் சிந்தூரில் சுட்டு வீழ்த்தப்பட்ட 5 பாகிஸ்தான் போர் விமானங்கள் இவைதான் - விமானப்படை தளபதி

Published On 2025-10-04 06:30 IST   |   Update On 2025-10-04 06:43:00 IST
  • 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங் பேசினார்.
  • மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டது.

கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் பாகிஸ்தான் விமானங்களை இந்தியா தரப்பும், இந்திய விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பும் கூறி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங்,

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றில் F-16 மற்றும் JF-17 போன்ற நவீன விமானங்களும் அடங்கும் என்று தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை தனது நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்தது மட்டுமல்லாமல், மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டதாகவும் கூறினார்.

விமானப்படை தனது நோக்கங்களை அடைந்தவுடன் உடனடியாக நடவடிக்கைகளை நிறுத்தியது, இது சர்வதேச அளவில் இந்தியாவின் பொறுப்பான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது என்றார். 

முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் போது இதற்கு நேர் மாறாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News