இந்தியா

தேர்தலில் வெற்றி பெறாமல் Mask-ஐ கழற்ற மாட்டேன் என சபதம் எடுத்த பீகார் கட்சித் தலைவர் படுதோல்வி!

Published On 2025-11-15 11:50 IST   |   Update On 2025-11-15 11:50:00 IST
  • லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
  • அவரது கட்சி தேர்தலில் விசில் சின்னத்தில் 243 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் வரை தனது முகமூடியைக் கழற்ற மாட்டேன் என்று சபதம் செய்திருந்த பிளூரல்ஸ் கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி மீண்டும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் வரை தனது முகமூடியைக் கழற்ற மாட்டேன் என்று சபதம் செய்திருந்த பிளூரல்ஸ் கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி மீண்டும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் சஞ்சய் சரவ்கி அந்த தொகுதியில் வென்றார். கடந்த தேர்தலிலும் சஞ்சய் சரவ்கியே வெற்றி பெற்றார்.

லண்டன் பொருளாதாரப் பள்ளி மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற புஷ்பம் பிரியா, சாதி மற்றும் மத அரசியலைப் போலல்லாமல், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதாக உறுதியளித்து 2020 இல் 'தி ப்ளூரல்ஸ் கட்சி'யை நிறுவினார்.

அவரது தந்தை வினோத் குமார் சவுத்ரி ஒரு ஜே.டி.யு தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அவரது தாத்தா உமகந்த் சவுத்ரி, முதல்வர் நிதீஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்த முறை, அவரது கட்சி தேர்தலில் விசில் சின்னத்தில் 243 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. 

இருப்பினும், 2020 தேர்தலில், அவரது கட்சி 148 இடங்களில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

அவர் பொதுவெளியில் எப்போதும் கருப்பு நிறத்தில் முகமூடி அணிந்து காணப்படுகிறார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே முகமூடியை கழற்றுவேன் என்று பிரச்சாரம் செய்து வந்தார்.

இப்போது அவர் தோல்வியடைந்ததால், அவர் முகமூடியை கழற்றாமலேயே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொது வெளியில் தோன்றுவாரா என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கேட்கின்றனர். 

Similar News