இந்தியா

பிரியாணி 'ருசி' இல்லை எனக்கூறிய வாலிபர் அடித்துக் கொலை- ஓட்டல் ஊழியர்கள் வெறிச்செயல்

Published On 2023-09-13 10:29 IST   |   Update On 2023-09-13 10:29:00 IST
  • ஓட்டல் ஊழியருக்கும், லியாகத் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், பஞ்சகுட்டா அடுத்த சந்திராயன் குட்டாவை சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 30).

நேற்று முன்தினம் இரவு லியாகத் அலி அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றார். லியாகத் அலி தனது நண்பர்கள் அனைவருக்கும் பிரியாணி ஆர்டர் செய்தார்.

ஓட்டல் ஊழியர் பிரியாணி சப்ளை செய்தார். பிரியாணியை சாப்பிட ஆரம்பித்த லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்கள் பிரியாணி ருசியாக இல்லை என ஓட்டல் ஊழியரிடன் தெரிவித்தனர்.

இதனால் ஓட்டல் ஊழியருக்கும், லியாகத் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தை கண்ட ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.

இதையடுத்து ஓட்டலின் ஷட்டரை இழுத்து மூடினர். பின்னர் ஓட்டல் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் கதறி துடித்தனர்.

இருப்பினும் ஆத்திரம் தீர தாக்கிய ஓட்டல் ஊழியர்கள் பின்னர் அவர்களை வெளியே தூக்கி வீசினர். படுகாயம் அடைந்த லியாகத் அலியை மீட்ட அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் லியாகத் அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் லியாகத் அலியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News