இந்தியா

முட்டை பஜ்ஜி சாப்பிட்ட வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்

Published On 2024-03-02 04:28 GMT   |   Update On 2024-03-02 04:28 GMT
  • திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.
  • சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், கோவிந்தஹள்ளியைச் சேர்ந்தவர் திருப்பதய்யா (வயது 39).

இவர் முட்டை பஜ்ஜியை மிகவும் விரும்பி சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி சுவர்ணா கடையில் முட்டை பஜ்ஜி வாங்கி வந்தார்.

அதை திருப்பதய்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பஜ்ஜி முட்டையுடன் தொண்டையில் சிக்கியது.

பின்னர் அதை வெளியே எடுக்க முயன்றார். வெளியே வராததால் திருப்பதய்யா மூச்சு திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுவர்ணா தொண்டையில் சிக்கிய பஜ்ஜியை எடுக்க முயன்றும் முடியவில்லை.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திருப்ப தய்யாவின் தொண்டையில் சிக்கியிருந்த முட்டை பஜ்ஜியை சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். இருப்பினும் மூச்சு விட முடியாமல் திருப்பதய்யா இறந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News