இந்தியா

எங்கள் ஆட்சியில் தேநீர் விற்றவர்கள் தேர்தலில் நின்றார்கள்: நிர்மலாவை விமர்சித்த காங்கிரஸ் தலைவர்

Published On 2024-03-28 10:20 GMT   |   Update On 2024-03-28 10:20 GMT
  • தேர்தலில் போட்டியிட தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
  • என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்று கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சியின் போது, தேநீர் விற்றவர்கள் தேர்தலில் நின்றார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News