இந்தியா

குடிபோதையில் வாலிபரை வெட்டிய சகோதரர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2022-08-07 08:52 GMT   |   Update On 2022-08-07 08:52 GMT
  • வாலிபர் பஞ்சாயத்து அலுவலகத்தின் சுவர் மீது ஏறி கீழே குதிக்க முயன்றார்.
  • எதிர்பாராதவிதமாக அங்கு அறுந்த மின் வயரில் தவறி விழுந்தார். இதில் மின்சாரம் பாய்ந்து சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள பெரிங்கராச்சிராயைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 43).

இவர் தனது சகோதரன் சஜீவ் (39) என்பவருடன் மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களுக்குக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அரிவாளால் சஜீவை வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். அவர் அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் சுவர் மீது ஏறி கீழே குதிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு அறுந்த மின் வயரில் தவறி விழுந்தார். இதில் மின்சாரம் பாய்ந்து சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News