இந்தியா

பிறந்து 21 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு விற்ற இளம்பெண் கைது

Published On 2023-08-02 04:07 GMT   |   Update On 2023-08-02 04:07 GMT
  • குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார்.
  • ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் நோனா டங்கா பகுதியில் உள்ள ரெயில்வே காலனியை சேர்ந்தவர் இளம் பெண் ரூபாலி மோண்டல்.

இவருக்கு கடந்த 21 நாட்குளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் அந்த குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அனந்தபுர் போலீசார் ரூபாலியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

மிட்னாபூரை சேர்ந்த கல்யாணி குஹா பெண்ணுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தையை விற்றதாக ரூபாலி கூறினார். இதைத்தொடர்ந்து ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ரூபாலிக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மற்றும் கல்யாணி குஹா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News