இந்தியா

3 நாட்களாக அறையில் அடைத்து இளம்பெண்ணை மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்த 4 பேர் கும்பல்

Published On 2022-12-20 04:13 GMT   |   Update On 2022-12-20 04:13 GMT
  • வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார்.
  • 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் விஜயவாடா பெங்கி சர்க்கிளில் உள்ள ஷாப்பிங் மாலில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வேலை செய்து வருகிறார். பணிக்கு சென்று வரும்போது இளம்பெண்ணுக்கும் வாலிபருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் நைசாக பேசிய வாலிபர் அவரை கானூர் சனத் நகரில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குச் சென்றதும் இளம்பெண்ணும் வாலிபரும் சேர்ந்து மது அருந்தினர்.

இதையடுத்து வாலிபர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து அறைக்கு வரவழைத்தார். 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து இளம்பெண்ணை அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.

இதனால் இளம்பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இளம்பெண்ணை தூக்கி வந்து அங்குள்ள சாலையோரம் வீசிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.

அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரம் இளம்பெண் படுத்து கிடப்பதை கண்டு பெனுமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News