தெலுங்கானா மாநிலத்தில் வீடு புகுந்த திருடனை தாக்கி விரட்டியடித்த பெண்
- வீட்டில் புகுந்த திருடனை எதிர்த்து பெண் சண்டையிட்டு போராடிய காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள வேமுலவாடா நகரில் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.
இதனை நோட்டமிட்டு திருடன் முகமூடி அணிந்த படி கையில் இரும்பு கம்பியுடன் அந்த வீட்டு சுற்றுச்சுவர் ஏறி உள்ளே குதித்தான்.
வீட்டில் தனியாக இருந்த பெண் வெளியே வரும் வரை வாசலுக்கு அருகே சுவர் ஓரமாக பதுங்கி இருந்தான்.அவனைக் கண்டதும் வீட்டில் கட்டி போட்டிருந்த நாய் குறைத்தது.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு பெண் வெளியே வந்தார். அப்போது இரும்பு கம்பியுடன் காத்திருந்த திருடன் பெண்ணை தாக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடனை தாக்க விடாமல் எதிர்த்து தாக்கினார் .
மேலும் திருடன் தள்ள முயன்ற போது வீட்டின் வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த துணியை பிடித்து சுதாரித்து கொண்டார்.
மேலும் பெண் கூச்சலிட்ட படியே திருடனை எதிர்த்து போராடினார். அப்போது திருடன் அவரது வாயை மூட முயற்சி செய்தான். அதுவும் முடியவில்லை.இறுதியாக பெண்ணின் எதிர் தாக்குதலால் திருடன் தப்பி ஓடி விட்டான்.
அவனை ஒரு தடியை எடுத்துக் கொண்டு பின்னால் பெண் விரட்டிச் சென்றார். ஆனாலும் அவன் தப்பி ஓடிவிட்டான். அவன் செல்லும்போது 7 பவுன் தங்கச்செயினை பறித்து சென்று விட்டதாக பெண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் புகுந்த திருடனை எதிர்த்து பெண் சண்டையிட்டு போராடிய காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளது.
இது தெலுங்கானா மாநிலத்தில் வைரலாக பரவி வருகிறது.