இந்தியா

சிபிஐ(எம்) மூத்த தலைவர் டி.சிவதாச மேனன் காலமானார்

Published On 2022-06-28 09:39 GMT   |   Update On 2022-06-28 10:20 GMT
  • 1987, 1991 மற்றும் 1996 இல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியில் இருந்து சிபிஐ (எம்) வேட்பாளராக கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1987-1991ல் ஈ.கே.நாயனார் தலைமையிலான சி.பி.ஐ.(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் அரசில் மின்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

மூத்த சிபிஐ(எம்) தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் (90) வயது தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இதனால் அவர் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடல் தகனம் நாளையில் மஞ்சேரியில் நடைபெறுகிறது.

மன்னார்க்காட்டில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய மேனன், ஆசிரியர் சங்கங்களை அமைத்து அரசியலில் நுழைந்தார்.

இந்தத் துறையில் முக்கியப் பதவிகளை வகித்த பிறகு, மேனன் சிபிஐ(எம்) கட்சியின் முக்கியத் தலைவராக பொறுப்பேற்றார்.

அவர் 1987, 1991 மற்றும் 1996 இல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியில் இருந்து சிபிஐ (எம்) வேட்பாளராக கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1987-1991ல் ஈ.கே.நாயனார் தலைமையிலான சி.பி.ஐ.(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் அரசில் மின்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

பின்னர், மேனன் 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் நாயனார் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலர் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.

Tags:    

Similar News