இந்தியா

விரைவில் பொது வாழ்க்கைக்கு திரும்புங்கள்- சோனியா குணமடைய மம்தா பிரார்த்தனை

Published On 2022-06-12 14:40 GMT   |   Update On 2022-06-12 14:40 GMT
  • விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக மம்தா குறிப்பிட்டுள்ளார்.
  • கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதுடெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை இப்போதுதான் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் சோனியா அவர்களே.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News