இந்தியா

அவதூறு வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன்

Published On 2023-05-15 12:53 IST   |   Update On 2023-05-15 12:53:00 IST
  • பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக இந்து சுரக்சா அமைப்பின் தலைவர் ஹிதேஷ் பரத்வாஜ் அவதூறு வழக்கை தொடர்ந்து உள்ளார்.
  • மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

சண்டிகா்:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக இந்து சுரக்சா அமைப்பின் தலைவர் ஹிதேஷ் பரத்வாஜ் இந்த அவதூறு வழக்கை தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. ஜூலை 10-ந்தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News