இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

Published On 2023-06-05 08:59 GMT   |   Update On 2023-06-05 08:59 GMT
  • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்,
  • டிரோனில் 3 பாக்கெட்டுகளில் 3 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரத்தன் கூடு பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாகிஸ்தானில் இருந்து அத்து மீறி நுழைந்த கறுப்பு நிறமுடைய மர்ம டிரோனை இந்திய வீரர்கள் சுட்டுவீழ்த்தினார்கள். அந்த டிரோனில் 3 பாக்கெட்டுகளில் 3 கிலோ ஹெராயின் என்ற போதைப்பொருள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஹெராயினை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News