இந்தியா

ஆந்திராவில் கல்யாண விருந்து சாப்பிட்ட 600 பேருக்கு வாந்தி, மயக்கம்

Published On 2023-05-13 05:10 GMT   |   Update On 2023-05-13 05:10 GMT
  • கூடுதலாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.
  • போலீசார் வருவாய்த்துறையினர் குவிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விஜயநகரம், கொவ்வாடா அக்ரகாரத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை சுமார் 2,000 பேருக்கு கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.

சில மணி நேரத்தில் விருந்து சாப்பிட்டவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது.

இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அங்குள்ள பதிரேகா ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர்.

மேல் சிகிச்சைக்காக துளாறு போகபுலா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். ஆஸ்பத்திரி முன்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடுதலாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.

போலீசார் வருவாய்த்துறையினர் குவிக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கல்யாண விருந்து சாப்பிட்ட 600 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News