இந்தியா

ரூ.279-க்கு பிரியாணி சாப்பிட்ட வாலிபருக்கு ரூ.7 லட்சம் கார் பரிசு

Published On 2024-01-03 05:13 GMT   |   Update On 2024-01-03 05:13 GMT
  • கடந்த 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல் நிர்வாகிகள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.
  • பிரியாணிக்கு கார் வழங்கும் புதுமை திட்டத்தால் தங்கள் ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருப்பதி:

திருப்பதியில் பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

அதில் பிரியாணி சாப்பிட்டால் மாபெரும் பரிசு காத்திருக்கிறது என தெரிவித்தனர்.

அதன்படி பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் ஒன்றை வழங்கினர்.

இதன் அடிப்படையில் ரூ.279 மதிப்புள்ள பிரியாணியை சாப்பிட்ட 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டோக்கன்களை பெற்றுக் கொண்டனர்.

இவர்களில் புத்தாண்டையொட்டி தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல் நிர்வாகிகள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.

அதில் திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவரது டோக்கன் கார் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து ராகுலுக்கு காரை பரிசாக வழங்கினர். பிரியாணி சாப்பிட்டதற்கு கார் பரிசா! என்ற ஆச்சரித்துடன் அவரும் பெற்று சென்றார்.

பிரியாணிக்கு கார் வழங்கும் புதுமை திட்டத்தால் தங்கள் ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News