இந்தியா

லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

Published On 2023-01-31 09:47 IST   |   Update On 2023-01-31 14:15:00 IST
2023-01-31 06:18 GMT

பிரதமரின் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தை முன்னெடுத்து செல்ல அரசு முடிவு செய்துள்ளது. பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் ஆசைகளை நிறைவேற்றும் அரசு. விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:11 GMT

கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:06 GMT

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:04 GMT

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தகம் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு கோடி சூபாய்க்கு மேல் லாபம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 06:01 GMT

டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமேக இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

2023-01-31 05:57 GMT

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது. அரசு துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது- ஜனாதிபதி திரவுபதி முர்மு

2023-01-31 05:52 GMT

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது. இரு முறை இந்த அரசை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி- ஜனாதிபதி திரவுபதி முர்மு

2023-01-31 05:44 GMT

அனைவருக்கும் வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு நடைபோட்டு வருகிறது. 9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி நாம் நகரத் தொடங்கியுள்ளோம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு

2023-01-31 05:43 GMT

2047ம் ஆண்டிற்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும். 2047ம் ஆண்டில் அடையவிருக்கும் லட்சியத்திற்கு ஏற்ற அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

2023-01-31 05:36 GMT

குடியரசு தலைவர் உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

Tags:    

Similar News