இந்தியா
டெல்லி யுபிஎஸ்சி கட்டிடத்தில் தீ விபத்து
- தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய டெல்லி ஷாஜகான் சாலையில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கட்டிடத்தின் நான்காவது மாடியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதியம் 3.10 மணியளவில் தீ பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நான்கைந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.