இந்தியா

இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிடும் சி.வி.சண்முகம்

Update: 2023-02-03 07:59 GMT
  • இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
  • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையூட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை என்று பதில் அளித்து இருந்தது.

பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் இன்று டெல்லி சென்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று நேரில் முறையிடுகிறார்.

இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News