இந்தியா
உ.பி முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
- ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு.
- அசம்பாவிதங்களை தடுக்க ஹெலிகாப்டரை உடனியாக வாரணாசியில் தரை இறக்கம்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வாரணாசிக்கு சென்றிருந்தார். அங்கு, காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு, ஆய்வுக் கூட்டமும் நடத்தினார்.
பின்னர், வாரணாசியில் இருந்து லக்னோவிற்கு யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது, ஹெலிகாப்டர் வானில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக பறவை ஒன்று மோதியது. இதில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அசம்பாவிதங்களை தடுக்க ஹெலிகாப்டரை உடனியாக வாரணாசியில் தரை இறக்கப்பட்டது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் கவுஷல்ராஜ் சர்மா தெரிவித்தார்.