இந்தியா

திருமண நிகழ்ச்சியின்போது சோகம்- சிலிண்டர் வெடித்து 4 பெண்கள் பலி

Published On 2022-07-03 09:48 GMT   |   Update On 2022-07-03 09:48 GMT
  • தீக்காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
  • திருமணத்தின்போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் விக்ரம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறியது.

இந்த விபத்தில், ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திருமணத்தின்போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிலிண்டரின் ரெகுலேட்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News