இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு

Published On 2026-02-10 11:32 IST   |   Update On 2026-02-10 11:32:00 IST
  • சந்திரபாபு நாயுடு சிறிது நேரம் சச்சின் டெண்டுல்கருடன் உரையாடினார்.
  • மாநிலத்திற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆந்திர மாநில பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி விமான நிலையத்திற்கு சென்றபோது பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை எதேர்ச்சியாக சந்தித்தார். சந்திரபாபு நாயுடு சிறிது நேரம் சச்சின் டெண்டுல்கருடன் உரையாடினார்.

இன்று ஜல் சக்தி மந்திரி சி.ஆர்.பாட்டில், உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் மற்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

அப்போது அமராவதி கட்டுமான பணிக்கு அதிக நிதி, கலப்பட நெய் வழக்கு மற்றும் 16-வது நிதி அறிக்கை பரிந்துரைகளால் மாநிலத்திற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News