இந்தியா

இந்தியாவில் புதிதாக 1,604 பேருக்கு கொரோனா

Published On 2022-10-30 10:47 IST   |   Update On 2022-10-30 10:47:00 IST
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,081 பேர் நலம் பெற்றுள்ளனர்.
  • இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,574 ஆக இருந்த நிலையில், இன்று 1,604 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரத்து 266 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,081 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 18,317 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 485 குறைவு ஆகும்.

கொரோனா பாதிப்பால் கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா 2 பேர், மிசோரத்தில் ஒருவர் என 5 பேர் நேற்று இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,29,016 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News