இந்தியா

பயிற்சிக்கு வந்த மாணவி பாலியல் பலாத்காரம்: மாயாஜால கலைஞர் கைது

Published On 2023-09-08 05:22 GMT   |   Update On 2023-09-08 05:22 GMT
  • மாயாஜால கலைஞரின் மையத்தில் பல சிறுமிகள் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.
  • வேறு யாருக்காவது மாயாஜால கலைஞர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் கொரோத்தா (வயது 44). மாயாஜால கலைஞரான இவர் தனியாக பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

அவரது மையத்திற்கு 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக அந்த மையத்தில் சிறுமி சில நாட்கள் தங்கி இருந்தார். அப்போது சிறுமியை மாயாஜால கலைஞர் ஜெயேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பயிற்சி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி அது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாயாஜால கலைஞர் மீது மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாயாஜால கலைஞர் ஜெயேஷை கைது செய்தனர்.

மாயாஜால கலைஞரின் மையத்தில் பல சிறுமிகள் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேறு யாருக்காவது மாயாஜால கலைஞர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News