இந்தியா

கணக்கு வெளிப்படையாக இருந்தால் நாட்டின் உண்மையான நிதி நிலைமை தெரிந்துவிடும்- சுப்பிரமணியம்

Published On 2024-01-18 10:16 GMT   |   Update On 2024-01-18 10:16 GMT
  • மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டில் தில்லுமுல்லு இருப்பதாக தகவல்.
  • நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

மத்திய அரசு சார்பில் வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024- 25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டில் தில்லுமுல்லு இருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பல்வேறு உண்மைகளை பல கட்டங்களாக மூடி மறைத்த பிறகே பட்ஜெட் வெளியிடப்படுகிறது. அரசின் வரவு, செலவு கணக்கு வெளியிப்படையாக இருந்தால் உண்மையான நிதி நிலைமை தெரிந்துவிடும்" என்றார்.

சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News